ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

2235பார்த்தது
ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது
ஜூஸ் கடை உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 58; இவர் ரோடுமாமாந்துார் பகுதியில் ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ரவிக்குமார், 26.

ஏற்கனவே இருவருக்குமிடையே இடத்தகராறு இருக்கும்பட்சத்தில், ஜூஸ் கடைக்கு சென்று, என்னை கேட்காமல் எப்படி கடை வைக்கலாம் என கேட்டு, சண்முகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். சண்முகம் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனர்.

டேக்ஸ் :