சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

50பார்த்தது
சாராயம், மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

அப்போது, பெருவங்கூரில் மதுபாட்டில் விற்ற மாயகண்ணன், 55; அந்தியூர் பெருமாள், 51; ஆகிய இருவரையும் கைது செய்து, தலா 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வெள்ளிமலை முருகன் கோவில் அருகே இன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ரகு, 30; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுபாட்டில்களை கரியாலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மோ. வன்னஞ்சூரில் சாராயம் விற்று தப்பி ஓடிய அதே கிராமத்தை சேர்ந்த பொன்னன் மகன் வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிந்து, 5 லிட்டர் சாராயத்தை கள்ளக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர்.

காட்டனந்தலில் விற்பனை செய்த வெங்கடேசன் மனைவி சிவகாமி, 40; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி