திரையுலகில் பாடலாசிரியராக உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நா. முத்துக்குமார் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று தனது 41 வயதில் காலமானார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், காய்ச்சல் முற்றிய நிலையில் மரணத்தை தழுவினார். 2006ம் ஆண்டு இவருக்கு ஜீவ லட்சுமி என்பவருடன் திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு ஆதவன் என்கிற மகனும், யோகலட்சுமி என்கிற மகளும் உள்ளனர். பல கோடி ரசிகர்களை கொண்ட அந்த கவிஞன் இன்று வானில் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.