இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு

591பார்த்தது
இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி என்பது உலகப்புகழ் பெற்றதாகும். இந்நிலையில் இலங்கையில் முதல்முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும் 100-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.