கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை கல்லூரியில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிற்றுண்டி வழங்கினார்கள். சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.மாணவர்களில் ஒருவர், 'எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா' என்றார்.சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்: “இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை இங்கே நீ காதலித்தாய்?”