'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கிறதா? கனிமொழி பதில்

57பார்த்தது
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கும் மேல் கைவசம் வைத்திருப்பதால், இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்பது குறித்து கனிமொழி பதிலளித்திருக்கிறார். சென்னையில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாகவும் இருக்கிறது. ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு என்ன முடிவு என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்” என்றார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி