இந்திய வம்சாவளி அயர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா

82பார்த்தது
இந்திய வம்சாவளி அயர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் ஃபைன் கேல் கட்சியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த பிரதமர் பதவியேற்றவுடன் பதவி விலகுவேன் என்று விளக்கம் அளித்துள்ளார். வரத்கர் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை மும்பையைச் சேர்ந்தவர் ஆவார்.

தொடர்புடைய செய்தி