“தண்ணீர் கேட்டா முடியாதுனு சொல்றாரு” - அன்புமணி ஆவேசம்

53பார்த்தது
திருச்சியில் நடந்த பாமக கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தண்ணீர் கேட்டு கர்நாடகாவிடம் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். அணையில் 72 டிஎம்சி தண்ணீர் இருக்கு, ஒரு டிஎம்சி கேட்டதற்கு கொடுக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறுகிறார். என்ன ஆணவம் இது?” என ஆவேசப்பட்டார். தொடர்ந்து பேசிய அவர், “ஆடு மாடுகளை பட்டியில் போட்டு அடைப்பது போல விக்கிரவாண்டியில் பெண்களை பட்டியில் போட்டு திமுகவினர் அடைத்து வைத்தனர்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி