ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்திட மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். கடலூரில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “ரூ.2,000 கோடிக்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்யவே மாட்டான்” என்று தெரிவித்துள்ளார்.