"என் அம்மாவின் கெளரவத்துக்காக ஆயிரம் வேலைகளை துறப்பேன்"

57பார்த்தது
"என் அம்மாவின் கெளரவத்துக்காக ஆயிரம் வேலைகளை துறப்பேன்"
நடிகையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனாவை கன்னத்தில் அறைந்த புகாரில், முன்னாள் சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர், தனது வேலையை இழப்பதால் பயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அம்மாவின் கெளரவத்துக்காக இதுபோன்ற ஆயிரக்கணக்கான வேலைகளை இழக்கவும் தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார். கங்கனாவை அறைந்ததற்காக அதிகாரிகள் அவரை வேலையில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கவுருக்கு வேலை தருவதாக கூறி பிரபலங்கள் பலரும் கவுருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி