சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளேன் - துரை வைகோ

79பார்த்தது
சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளேன் - துரை வைகோ
மதிமுக வலுப்பெற்று மீண்டும் பம்பரம் சின்னத்தை மீட்டெடுப்போம் என துரை வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார். மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலையில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் "செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன்" என துரை வைகோ தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி