சிறுமி பலாத்காரம்.. இன்ஸ்டாகிராம் நண்பர் கைது!

76381பார்த்தது
சிறுமி பலாத்காரம்.. இன்ஸ்டாகிராம் நண்பர் கைது!
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஜார்ஜ் என்பவர் மீது அடிமாலி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 14 வயது சிறுமி நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர் குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கோதமங்கலத்தில் இருந்து சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில் ஒரே வருடத்தில் இரண்டு முறை வேறு சிலராலும் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். தற்போது ரஞ்சித், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி, கூட்டிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி