சிறுமி பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

1070பார்த்தது
சிறுமி பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
டெல்லி சதர் பஜாரில் சுரேஷ்குமார்(38) என்பவர் டீ விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் 12,14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சுரேஷ் தனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் புத்தாண்டிற்கு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார். இதனால் அப்பெண்ணின் உறவினரான 12 வயது சிறுமியை குப்பை எடுக்க வேண்டும் என கூறி அவர்களிடம் அனுப்பியுள்ளார். அப்போது 4 பேரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 4 நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண், சுரேஷ், மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி