சிக்கன் குழம்பு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

70741பார்த்தது
சிக்கன் குழம்பு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், முதல் நாள் சமைத்த சிக்கன் உணவை, கோவிந்தராஜின் குடும்பத்தினர் மறுநாள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட ஒவ்வாமையால், உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், கோவிந்தராஜின் இளைய மகளான இலக்கியா (12) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி