"கும்பல் வன்முறை" தடுப்புச் சட்டம் - விசிக வலியுறுத்தல்

77பார்த்தது
"கும்பல் வன்முறை" தடுப்புச் சட்டம் - விசிக வலியுறுத்தல்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விசிக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நாடெங்கிலும் குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் பாஜக'வினர் இசுலாமியர்களையும், பழங்குடி மக்களையும் குறிவைத்து 'கும்பல் வன்முறையில்' ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக்களைச் சேதப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனையொட்டி உச்சநீதிமன்றம் 'கும்பல் வன்முறை' தடுப்புச் சட்டம் இயற்றிட இந்திய அரசுக்கு வழிகாட்டியுள்ளது. அதன்படி சட்டமியற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி