சத்தீஸ்கரின் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

69பார்த்தது
சத்தீஸ்கரின் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினருக்கு இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 2 தினங்களாக நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், நான்கு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி