முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை!

53பார்த்தது
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா (41) நேற்று (ஜூலை 16) இரவு படுகொலை செய்யப்பட்டார். காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தையடுத்து, போலீசார் தம்மிக்க நிரோஷனாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். கொலையாளி யார் என்பதை போலீசார் தேடி வருகின்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்கு தம்மிக்க தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி