அமைச்சர் காரை சோதனை செய்த பறக்கும் படை

83பார்த்தது
அமைச்சர் காரை சோதனை செய்த பறக்கும் படை
கோவையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். கோவை தொகுதியின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் டிஆர்பி ராஜா கவுண்டம்பாளையத்தில் இருக்கும் திமுக பகுதி செயலாளர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த பறக்கும் படையினர், காரில் ஏதேனும் பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அவரை அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி