காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். வலிமையான பெண்கள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவார்கள் என்றார். தற்போது 10 அரசு ஊழியர்களில் ஒருவர் மட்டுமே பெண்கள் என பேசினார். மேலும், 30 லட்சம் அரசுப் பதவிகளுக்கு உடனடி நிரந்தர நியமனம் உத்தரவாதம். ஒவ்வொரு பட்டதாரி மற்றும் டிப்ளமோதாரருக்கும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.