வாழைத்தார்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

65பார்த்தது
வாழைத்தார்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏல சந்தையில் வாழைத்தார்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய ஏலத்தில் கடந்த வாரம், ரூ.250க்கு விற்ற பச்சைநாடன் வாழைத்தார், நேற்று, ரூ.400க்கும், ரூ.300க்கு விற்ற பூவன் வாழைத்தார், ரூ.400க்கும், அதேபோல், ரூ.300க்கு விற்ற ரஸ்தாளி, ரூ.400க்கும், ரூ.250க்கு விற்ற கற்பூரவல்லி வாழைத்தார் ரூ.300க்கும், ரூ.5 விற்ற மொந்தன் காய் ரூ.10க்கு விற்பனை ஆனது.

வரத்து குறைவாலும், சுப முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதாலும், கோடை வெயில் தாக்குதலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சி தரும் பச்சைநாடன் வாழைத் தாரை மக்கள் விரும்பி வாங்குவதால், வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி