குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு

58பார்த்தது
குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாததால் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கிறது. இந்நிலையில், குற்றாலம் பகுதியில் லேசான மழை பெய்த நிலையில், மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து சிறிது நேரத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி