தெலங்கானா: பிரபல நாட்டுப்புற பாடகி ஸ்ருதி இன்று (டிச.19) தற்கொலை செய்துகொண்டார். திருமணமான 20 நாட்களில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான தயாகர் என்ற இளைஞரை ஸ்ருதி காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. தொல்லை தாங்க முடியாமல் ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.