கன்னட தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5ஆவது சீசனில் போட்டியாளர்களாக பாடகர் சந்தன் ஷெட்டி மற்றும் வலைதள பிரபலம் நிவேதிதா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்த நிலையில் பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.