ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை கடைசி நாள்

56பார்த்தது
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை கடைசி நாள்
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ. 2, 000 வழங்கப்பட்டுவருகிறது. உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் உயிருடன் உள்ளதை உறுதிப்படுத்த வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் பகுதி விஏஓவிடம் உரிய சான்று பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை (ஜூலை 31) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி