அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை - அலறிய பயணிகள்

6230பார்த்தது
சத்தியமங்கலம் அடுத்துள்ள நெய்தாளபுரம் கிராமம் வழியாகச் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் பதற்றம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தலமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது சாலைகளை குறுக்கிட்டு பயணிகளை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வரை செல்லக்கூடிய அரசு பேருந்து வனச்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது நெய்தாளபுரம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு முதியனூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மறித்து திடீரென ஒரு காட்டு யானை சாலையின் குறுக்கே வந்து நின்றது.

பேருந்தை நோக்கி வேகமாக ஓடி வந்து பெரும் சப்தத்தை எழுப்பியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து கூக்குரலிட்டனர். பின்னோக்கி சென்ற பேருந்தின் அருகில் வரை வந்த அந்த யானை திடீரென நின்றது. சிறிது நேரம் நின்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பிறகே, பயணிகள் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு அந்த அரசு பேருந்து மீண்டும் தலைமலை நோக்கி சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி