தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் யானைகள்

2592பார்த்தது
தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் யானைகள் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது அங்குள்ள வனச்சாலையை கடப்பது வழக்கம். இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட் தாளவாடி - மல்லன் குழி ரோட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக கடந்து சென்றது. இதை அந்த வலியாகச் சென்ற சிலர் தங்கள் மொபைலில் வீடியோ எடுத்தனர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி