தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் யானைகள் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது அங்குள்ள வனச்சாலையை கடப்பது வழக்கம். இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட் தாளவாடி - மல்லன் குழி ரோட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக கடந்து சென்றது. இதை அந்த வலியாகச் சென்ற சிலர் தங்கள் மொபைலில் வீடியோ எடுத்தனர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.