நல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆ ராசா

2900பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள விண்ணப்பள்ளியில் ஆ ராசா அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக வெற்றி பெற்றால் ஆயிரம் ரூபாய் சிலிண்டருக்கு 500க்கு வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் அங்கு வேனில் பாடகட்டி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டருக்கு பூமழை போட்டு இறுதி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆ ராசா அவர்கள் என்னை உங்களிடத்தில் ஒப்படைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது தேர்தல் பரப்புகளில் கடந்த 15 நாட்களாக ஒரு முழக்கத்தை முன்னெடுக்குகிறார் அது என்ன முழக்கம் என்றால் இந்தியாவை காப்பாற்ற உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்பதாகும்.

அப்படி என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லையா யாருடைய கையில் பாதுகாப்பாக இல்லை என்றால் மோடி கையில் இந்திய பாதுகாப்பு இல்லை குரங்கு கையில் கொடுத்த பூ மாலை போல கடந்த பத்தாண்டு காலம் மோடியின் ஒப்படைத்த காரணத்தினால் இன்றைக்கு இந்தியா எல்லாமே வேலை வாய்ப்பு இருந்தாலும் வறுமையாக இருந்தாலும் என எல்லாவற்றிலும் மிக மோசமான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

தொடர்புடைய செய்தி