சத்தியமங்கலம் அருகே சிறுமியை கடத்தி திருமணம்: 5 பேர் கைது

1063பார்த்தது
சத்தியமங்கலம் அருகே சிறுமியை கடத்தி திருமணம்: 5 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த நிலையில் வீட்டிலிருந்து சிறுமியை காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நெருஞ்சிப்பேட்டை சேர்ந்த கூலித் தொழிலாளியான காமராஜ் என்ற கருணா(வயது 19) என்பவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதும், பின்னர் அவரை ஆம்பூர் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ணா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆம்பூரை சேர்ந்த சஞ்சய்(23), நெருஞ்சிப்பேட்டை சேர்ந்த சண்முகம்(45), அருண்(23), சந்துரு(23) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி