பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களில் பூச்சாட்டு

1052பார்த்தது
பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களில் பூச்சாட்டு
ஈரோட்டில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களில் பூச்சாட்டுகளுடன் பொங்கல் மற்றும் குண்டம்
தேர்த்திருவிழா துவக்கப்பட்டது;
ஈரோடு மாவட்டம் மீனாட்சி சுந்தரம் சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் மற்றும் வகையறாவைச் சார்ந்த நடு மாரியம்மன், மற்றும் காரவாய்க்கால் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பண்டிகையை விமர்சையாக கொண்டாடப்படும் இதனை முன்னிட்டு இந்தாண்டும் பெரிய மாரியம்மன் மற்றும் அதன் வகையறாவான நடு மாரியம்மன், கார வாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுகளுடன் பொங்கல் மற்றும் குண்டம் தேர் திருவிழா வெகு விமர்சனையாக துவங்கப்பட்டது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்து தாங்கள் கொண்டு வந்த மலர்களை அம்மனுக்கு வழங்கினர் பூச்சாட்டுதலை முன்னிட்டு கோயில் முழுவதும் மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டது அம்மனை தரிசிக்க பொதுமக்களின் வருகைகள் அதிகரித்து உள்ளதால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி