அதிவேகமாக வந்த கார் மோதியதில் தொழிலாளி பலி

1055பார்த்தது
குமாரபாளையம் அருகே நடந்து சென்ற கட்டிட கூலித் தொழிலாளி மீது கார் மோதியதில், தொழிலாளி பலியானார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 59. கட்டிட கூலி. இவர் தினமும் குமாரபாளையத்திற்கு கட்டிட கூலி வேலை செய்ய  வருவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கவுரி தியேட்டர் பின்புறம் சேலம் கோவை புறவழிச்சாலையில் இவர் நடந்து கடந்த போது, கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான கோவை, சின்னியம்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் பிரவீன்குமார், 34, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி