திமுக வேட்பாளர் பிரகாஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்

1088பார்த்தது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் திமுக வேட்பாளர் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் பிரகாஷ் ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மோளக்கவுண்டன் பாளையத்தில் உள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதலே வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் எந்த பகுதியிலும் வாக்கு இயந்திரங்கள் பழுதாகாமல் வாக்குப்பதிவு முறையாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் வாக்குச்சாவடியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்றும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி