பெருந்துறையை அடுத்துள்ள ஊத்துக்குளி, முதலிபாளையம் ஊராட்சி, மானூர் கிராமத்தில் அமைந்துள்ள ராமபிரான் திருக்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ ராமநவமி சிறப்பு வழிபாடு உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராமர் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.