பெருந்துறையில் டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளான பால் லாரி.

72பார்த்தது
பெருந்துறையில் டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளான பால் லாரி.
பெருந்துறை, குன்னத்தூர் ரோடு பகுதியில் ரோட்டில் நடுவே வைக்கப்பட்டிருந்த கான்க்ரீட் டிவைடர் கற்களின் மீது மோதி பால் லாரி விபத்துக்குள்ளானது.

பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம், பெருமாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு தேவையான பால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சேகரிக்கப்பட்டு நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. இன்று அதிகாலை நாலு மணி அளவில், பெருந்துறை, குன்னத்தூர் ரோடு, துடுப்பதி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், கம்பெனிக்கு பால் லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு டேங்கர் லாரி ரோட்டின் நடுவே உள்ள கான்கிரீட் தடுப்புக் கற்களின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. அந்தப் பகுதியில் அப்போது வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியின் டிரைவர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். பின்னர் காலை 7 மணி அளவில் ரெக்கவரி வாகனத்தின் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி