ஈரோடு: 12 ஆவணங்களை காண்பித்து வாக்களித்த வாக்காளர்கள்

72பார்த்தது
ஈரோடு: 12 ஆவணங்களை காண்பித்து வாக்களித்த வாக்காளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

அதன்படி இன்று (பிப்ரவரி 05) வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பாராளுமன்ற சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஒன்றை காண்பித்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி