அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

557பார்த்தது
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
பவானி நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

பவானி, ஏப். 29:

பவானி நகர அதிமுக சார்பில் கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது.

அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலாளர் எம். சீனிவாசன் தலைமை தாங்கினார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே. சி. கருப்பணன் எம்எல்ஏ, நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், இளநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

இந்நீர்மோர் பந்தல் கோடை காலம் முடியும் வரை செயல்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். பவானி ஒன்றியக் குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜ், நகர எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம். ஜி. நாத் (எ) மாதையன், மாவட்ட கவுன்சிலர் கே. கே. விஸ்வநாதன், தொட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர்கள் எஸ். எம். தங்கவேலு, பி. ஜி. முனியப்பன், மேகநாதன், பேச்சாளர் கோதண்டராமன், இளைஞர் பேரவை மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி