வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் பிரச்சாரம்

1089பார்த்தது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் இன்று அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்
19 தினங்களே இருக்கும் நிலையில் திமுக, அதிமுக , பாஜக ,
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இன்று வாக்கு சேகரித்தனர். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சமய சங்கிலி, கலியனூர்,
தெற்கு பாளையம், பராசக்தி நகர்
உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இன்று அதிமுக , தேமுதிக,
புதிய தமிழகம்,
எஸ். டி. பி. ஐ.
கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது கட்சி கொடிகளை ஏந்தியபடி இருசக்கர வாகனங்களில் சென்றனர். ஆங்காங்கே உள்ள கிராம மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, சொத்து வரி,
பால் விலை,
மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்ததால் ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். பிரச்சாரம் குறித்து அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார்பேசுகையில், கிராமங்களில் திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு அலையும் ,
அதிமுகவிற்கு கிராம மக்கள் மத்தியில் ஆதரவு அலையும் வீசுகிறது என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி