மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று (மார்ச்., 12) இரவு சுவாமி பரங்கிரிநாதர் அன்னை கோவர்த்தனம்பிகை ரிஷப வாகனத்திலும் சுவாமி முருகப்பெருமான் அன்னை தெய்வானை தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.