ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இரண்டு சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.