1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகளின் விகிதம் மிகக் குறைவாக இருப்பதை கண்டு அரசு அதிர்ச்சியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுக்கொலை தான் என முடிவுக்கு வந்த அரசு, பெண் சிசுக்கொலைகளை தடுப்பதற்கும், ஆண் - பெண் பிறப்பு விகிதங்களை சமப்படுத்துவதற்கும் சட்டத்தை (PCPNDT ACT 1994) இயற்றியது. மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்பவர்களுக்கும், அதை தெரிவிக்கும் மருத்துவர்களுக்கும் கடுமையான தண்டனைகளையும் வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.