சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவிற்கு சென்ற விஜயதரணி, விளவங்கோடு இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால், தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஜயதரணி, “பாஜக தலைமை மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மக்கள் பணியாற்றுவதற்கு வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட கண்டிப்பாக பாஜக எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் என நம்புகிறேன்.” என்றார்.