பழனியில் தைப்பூசம் தொடங்கியுள்ளது, இதனால் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க தினமும் பக்தர்கள் கூட்டம் இங்கு அலைமோதி வருகிறது, இந்நிலையில் இன்று பழனி, தாராபுரம் நெடுஞ்சாலை எங்கும் பழனி மலை முருகனை தரிசிக்க நடைப்பயண பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர், மேலும் நடைப்பயண பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,