திமுக சாா்பில் திறக்கப்பட்ட நீா் மோா் பந்தல்

58பார்த்தது
திமுக சாா்பில் திறக்கப்பட்ட நீா் மோா் பந்தல்
கள்ளிமந்தையத்தில் திமுக சாா்பில் திறக்கப்பட்ட நீா் மோா் பந்தலில் பொதுமக்களுக்கு தா்பூசணிகளை வழங்கிய திமுக ஒன்றிய செயலா் க. தங்கராஜ்.
உடன் தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவா் பி. சி. தங்கம் உள்ளிட்டோா்.

ஒட்டன்சத்திரத்தில் திமுக அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன், அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் முன்னாள் மேயா் மருதராஜ், வேடசந்தூா் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், அதிமுக நகரச் செயலா் எஸ். நடராஜன், ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணி, ஒடைப்பட்டி செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி