நண்பனின் கழுத்தை நெரித்து கொலை

84பார்த்தது
வத்தலகுண்டு இலங்கை அகதிகள் முகாமில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்த சமையல் மாஸ்டர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இலங்கை அகதிகள் முகாமில் குடியிருந்து வருபவர் தேவராஜ் மகன் அனந்தகுமார் வயது 46. பெயிண்டராக உள்ளார். இவர் அகதிகள் முகாமில் தனியாக குடியிருந்து வருகிறார். இவரும் திண்டுக்கல் அருகே உள்ள அகதிகள் முகாமில் குடியிருந்து வரும் நாகராஜ் என்பவரும் சேர்ந்து நண்பர்களாகினர். இருவரும் வத்தலகுண்டு இலங்கை அகதிகள் முகாமில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் புதன்கிழமை காலை 11. 30 மணியளவில் மது அருந்தி உள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாக நாகராஜன் நண்பர் அனந்தகுமாரை குடிபோதையில் கழுத்தை நெரித்து கொலை செய்தார் அனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தப்பி ஓடிய நாகராஜன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலை மணி தலைமையில் சாரபு ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அனந்தகுமார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி