அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

1028பார்த்தது
திண்டுக்கல் மாநகர் அதிமுக மேற்கு பகுதி அலுவலகம் பேகம்பூர் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதனை முன்னிட்டு புதன்கிழமை இரவு 8. 30 மணியளவில் திண்டுக்கல் அதிமுக மேற்கு பகுதி அலுவலகத்தை பேகம்பூர் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வேட்பாளர் முகமது முபாரக் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி