குடும்ப தகராறு காரணமாக சராமாரியாக அரிவாள் வெட்டு

85பார்த்தது
குடும்ப தகராறு காரணமாக சராமாரியாக அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே தோட்ட குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் ராசு (67). இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் (60) தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், நான்கு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் முத்துப்பாண்டி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது, மூன்றாவது மகன்கள் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். இதனை அடுத்து கடைசி மகன் மருதுபாண்டி (30) பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டாவது மகனின் மனைவி ஜெயலலிதாக்கும், அவரது மாமனார், மாமியாருமான ராசு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து நேற்று நடந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், ஜெயலலிதாவின் தந்தை முருகேசனையும், அவரது மகன் அருண்குமாரையும் ராசு குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த முருகேசன் மற்றும் அவரது மகன்கள், மகன்களின் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு வீடு புகுந்து ராசு, மருதுபாண்டி, பாண்டியம்மாள் மற்றும் பாண்டியம்மாளின் தம்பி மலைச்சாமி உட்பட 4 பேரையும் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி