இந்தியாவில் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள், தங்கம் வாங்குவது அணிவதற்கு அல்ல அடமானம் வைப்பதற்கே ஆகும். அவசர காலங்களில் தங்கம் அவர்களுக்கு கைகொடும் என்பதாலேயே பலர் தங்கம் வாங்குகின்றனர். இந்நிலையில், கோவிட் பெரும் தொற்றிற்கு பிறகு, செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், நகை அடமானம் வைத்து, சுமார் ரூ. 40,080 முதல் ரூ. 63,770 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை RBI வெளியிட்டுள்ளது.