திண்டுக்கல்: நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

2624பார்த்தது
திண்டுக்கல்: நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டி சந்தனமாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவரது மகள் கோபிகா வயது 18. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாவது ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம் போல காலை கல்லூரிக்கு சென்ற கோபிகா வீடு திரும்பவில்லை இதனையடுத்து மகளை பல இடங்களில் தேடிய சண்முகம் அவரை பற்றிய தகவல் தெரியாமல் போகவே இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி