மாநகராட்சியில் இருந்து இவி மெஷின்கள் அனுப்பும் பணி

77பார்த்தது
நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மையங்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து இவி மெஷின்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாளை தமிழக முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பாதுகாப்புடன் வாக்கு பதிவு மையங்களுக்கு இவி மிஷின்கள், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய அலுவலகங்களிலிருந்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய 6 சட்டமன்ற
தொகுதிகளும் அடங்கும்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1812 வாக்குப்பதிவு மையங்கள் வேடசந்தூர் தொகுதியில் 309 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு 217 வாகனங்கள் மூலம் ஆயுதம் ஏந்திய போலீசாருடன் வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி