கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழை

3280பார்த்தது
பழனி பாலமுத்திரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழை.

பழனியில் கடந்த சில தினங்களாக கோடையின் வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலானோர் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு 7: 30 மணி அளவில் பழனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலமுத்திரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அரை மணிநேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி