திண்டுக்கல்: வீடு வீடாக சென்று நடிகை வாக்கு சேகரிப்பு

5377பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு வாக்கு சேகரித்த நடிகை ரோகிணி.

வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தெருத்தெருவாக வீடு வீடாக நடந்து சென்று நடிகை ரோகிணி சச்சிதானந்தத்தை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் செலுத்த சொல்லி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மீண்டும் மாநகராட்சிக்கு உட்பட்ட தெய்வசிகாமணிபுரம் கக்கன் நகர் போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்து சென்றும் பிரச்சார வாகனங்களில் சென்றும் பொது மக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி